அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள்

அரியலூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது.

Update: 2021-12-22 13:38 GMT

அரியலூர் அரசு கலைக்கல்லூரில் வாக்களிப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அரியலூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மாணவ,மாணவியர்களிடையே பல்வேறு போட்டிகள்  நடைபெற்றது.

போட்டியை அக்கல்லூரி முதல்வர் ஜெ.மலர்விழி தொடக்கி வைத்து, வாக்களிப்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

அரியலூர் தேர்தல் வட்டாட்சியர் ஆ.சரவணன் கலந்து கொண்டு, 18 வயது உடைய அனைவரும் கட்டாயம் வாக்களித்து ஜனநாயகத்தின் குடிமகன் என்பதை நிருப்பிக்க வேண்டும். யாருடைய தூண்டுதலும் இல்லாமல் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வுகளை மாணவர்களிடையே ஏற்படுத்தினார்.

தொடர்ந்து, மாணவ,மாணவியர்களிடையே ஓவியப் போட்டி, சுவரொட்டி தயாரித்தல், விழிப்புணர்வு பாட்டு போட்டி, குழு நடனம் மற்றும் கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

தமிழ்த்துறை பேராசிரியர்கள் க.தமிழ்மாறன், த.கார்த்திகேயன், பெ.கலைச்செல்வன், இயற்பியல் துறைத் தலைவர் மு.கந்தசாமி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஆ.வேலுசாமி, மேரிவைலட் கிறிஸ்டி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். ஏற்பாடுகளை கல்லூரி தேர்தல் ஒருங்கிணைப்பாளர் வெ.கருணாகரன் செய்திருந்தார்.

Tags:    

Similar News