அரியலூரில் சிறுமிகளை பலாத்காரம் செய்த முதியவர் குண்டர் சட்டத்தில் கைது

அரியலூர் மாவட்டத்தில் சிறுமிகளை பலாத்காரம் செய்த முதியவரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-07 12:28 GMT

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் மகன் அண்ணாதுரை (57). இவர் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சுமார் 10 வயது உள்ள  சிறுமிகளை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் வெளியே அழுது கொண்டேசென்ற சிறுமிகளை விசாரித்த பெற்றோர் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி அண்ணாதுரையை கைது செய்து சிறையில் அடைத்தார்.

இதுகுறித்து அரியலூர் டி.எஸ்.பி. மதன் ஏ.டி.எஸ்.பி திருமேனி எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா ஆகியோரின் பரிந்துரையின் பேரில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அண்ணாதுரையை ஒரு வருடம் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags:    

Similar News