செந்துறையில் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
செந்துறையில் தமிழக அரசின் அலங்கார ஊர்தியை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து தி.கவினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அம்பேத்கர் சிலை அருகே, தமிழக அரசின் அலங்கார ஊர்தியை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து தி.க.வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தி.க. மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் தலைமை வகித்தார். தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் மு.ஞானமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் எழில்மாறன், தி.மு.க. நிர்வாகிகள் விஸ்வநாதன், சிவ.பாஸ்கர், தனபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கருப்புசாமி, தலித்வெற்றி, வீரவளவன் உட்பட பலரும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.