சிறப்பாக பணி புரிந்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு எஸ்.பி. பாராட்டு சான்றிதழ் அளித்து பாராட்டினார்.

Update: 2022-05-01 08:06 GMT

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு அரியலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் காவல்நிலைய குற்ற வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து வந்த அருள் செல்வம் என்கிற கொளஞ்சி (32) என்பவரை விரைந்து கைது செய்ய உதவி புரிந்து மெச்சத் தகுந்த பணி செய்தமைக்காக சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், தலைமை காவலர் இயேசுராமன் மற்றும் முதல் நிலை காவலர் சுந்தராஜன் ஆகியோருக்கும்,

குவாகம் காவல் நிலைய சரகத்தில் 28.04.2022 அன்று இரவு ரோந்து பணியில் இருந்த போது மணல் திருடி வந்தவர்களை  வாகனத்துடன் பறிமுதல் செய்தும் மணல் திருடியவரை குவாகம் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்ய உதவி புரிந்தமைக்காக உதவி ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் காவலர் ராஜகண்ணன் ஆகியோரை

மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி அளித்து பாராட்டினார்.

Tags:    

Similar News