மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்று ஒப்படைத்து உதவி தொகை பெற வேண்டுகோள்

மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்று ஒப்படைத்து உதவித்தொகையை தொடர்ந்து பெறலாம் என அரியலூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.

Update: 2022-06-29 07:55 GMT

மாற்றுத்திறனாளிகளுடன் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி (பைல்படம்).

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதந்தோறும் ரூ.2000/- பெறும் மாற்றுத் திறனாளிகளை சார்ந்தவர்கள் எவரேனும் வாழ்நாள் சான்று ஒப்படைத்து 2022-2023 ஆம் நிதியாண்டிற்கான உதவித்தொகையை தொடர்ந்து பெற்று பயனடையலாம்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குன்றியோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் 75 சதவிதம் அதற்கு மேல் கைகள் கால்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டோர் மற்றும் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000/- வழங்கப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதந்தோறும் ரூ.2000/- பெறும் மாற்றுத் திறனாளிகளை சார்ந்த எவரேனும் வாழ்நாள் சான்று படிவத்தில் கிராம நிர்வாக அலுவலரின் சான்றொப்பத்துடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அறை எண்:17, தரைத்தளம், அரியலூர்-621704 என்ற முகவரிக்கு நேரில் வந்து 12.07.2022 க்குள் சமர்ப்பித்து 2022-2023 ஆம் நிதியாண்டிற்கான உதவித்தொகையை மாதந்தோறும் தொடர்ந்து பெற்று பயனடையுமாறும், வாழ்நாள் சான்று வழங்காத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை தொடர்ந்து வழங்கய இயலாது எனவும், மேலும் இதுவே வாழ்நாள் சான்றிதழ் வழங்கிட இறுதி வாய்ப்பாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News