தொகுதி மேம்பாட்டு நிதியில் வளர்ச்சிப்பணிகள்: எம்எல்ஏ கண்ணன் தொடக்கம்

Developments Works Inaugurated by MLA

Update: 2022-06-30 14:59 GMT

பணிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,தா.பழூர் ஒன்றியத்தில், அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் TNRRIS திட்டத்தின் மூலம்,

நாயகனைப்பிரியாள் ஊராட்சி, நாயகனைப்பிரியாள் பாம்புக்குழி முதல் வாணதிரையன்பட்டினம் செல்லும் சாலை ரூபாய் 42.88 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணி, சோழமான்தேவி ஊராட்சி,சோழமான்தேவி முதல் குறிச்சி வரை செல்லும் சாலை ரூபாய் 55.00 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணி, இடங்கண்ணி ஊராட்சி,அன்னகாரன்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமையற்கூடம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5,32,000 மதிப்பீட்டில் கட்டும் பணி,வாழைக்குறிச்சி ஊராட்சி,மதனத்தூர் காலனி மாரியம்மன் கோவில் தெருவில்,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5,00,000 மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆகிய பணிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) செந்தில், வட்டார வளர்ச்சி அருவலர்(கி.ஊ) ம.அன்புசெல்வன், பொறியாளர்கள் சா.சரோஜினி,மனோகரன்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஒன்றிய மேற்பார்வையாளர் நிர்மல், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாயகனைபிரியாள் ராஜாராம்,சோழன்மாதேவி ஜெயலெட்சுமி,இடங்கண்ணி ஷீலா இளங்கோவன், வாழைக்குறிச்சி மல்லிகா கிட்டப்பா, கழக பொதுக்குழு உறுப்பினர் இரா.அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.ஆர்.இராமதுரை பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News