அரியலூரில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் ஏஜடியூசி, தொமுச, சிஜடியூ, ஐஎன்டியூசி, ஹெஎம்எஸ் சங்கங்கள் இணைந்து விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-26 08:15 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கங்கள்.

அரியலூர் அண்ணா சிலையருகில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் வாங்கவேண்டும், தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏஜடியூசி தண்டபாணி, சிஜடியூ மாவட்ட செயலாளர் துரைசாமி, எல்பிஎப் மகேந்திரன், ஐஎன்டியூசி விஜயகுமார், ஹெஎம்எஸ் இராமசாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்ததனர். இதில் சிஜடியூ மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், சுப்பிரமணியன், போக்குவரத்துகழகம் முருகன், மாவட்டக்குழு சிவலிங்கம், பன்னீர்செல்வம், உலகநாதன், தேவா, கந்தன், அருண்பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான தொழிற்சங்க தோழர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News