மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்கத்தினர் மற்றும் திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் செந்துறை பிரிவு சாலையில், மறியல் ஈடுபட்டனர்.

Update: 2021-09-27 10:00 GMT

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


அரியலூர் அண்ணாசிலை அருகில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக நகரச்செயலாளர் முருகேசன், திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் இளையராஜா, துணைப்பொதுச்செயலாளர் பாலு, ஏஜடியூசி மாவட்டச்செயலாளர் தண்டபாணி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக தொழிற்சங்கத்தினர் மற்றும் திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் செந்துறை பிரிவு சாலையில் தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளை வஞ்சிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், 100 நாள் வேலையில் சாதிவாரியாக வேலை, கூலி வழங்குவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், திருமானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் திமுக கூட்டணி கட்சியினர் போராட்டத்திலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News