தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3000 உயர்த்தி தர கோரி ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்களுக்கு மாத பென்சன் ரூ.3000 உயர்த்தி தரக்கேரி சி.ஐ.டி.யூ. சங்கம் சார்பில் அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. சங்கம் சார்பில் அரியலூர் மாவட்ட நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை தாங்கினார். தொழிலாளர்களுக்கு மாத பென்சன் ரூ.3000 உயர்த்தி தர வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதில் பென்சன் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ அரியலூர் மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் சிற்றம்பலம், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் சந்தானம், மற்றும் கட்டுமான சங்க தலைவர்கள் மெய்யப்பன், ஆதிலெட்சுமி, ஆரோக்கியநாதன் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.