அரியலூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூரில் அண்ணா சிலை அருகில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-27 13:02 GMT

சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, கட்சிகள் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அரியலூரில் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, கட்சிகள் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, வேலையின்மை, வெறுப்பு அரசியல், மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து அரியலூரில் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

CPIM மாவட்ட செயலாளர் M.இளங்கோவன், CPI மாவட்ட செயலாளர் உலகநாதன், VCK மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வநம்பி ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் CPIM மாவட்ட செயற்குழு கிருஷ்ணன், கந்தசாமி, துரை.அருணன், மாவட்டக்குழு தோழர்கள் துரைசாமி,புனிதன், சந்தானம், CPI மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, மணிவேல், ஆறுமுகம் கனகராஜ், அஞ்சலை, விசிக அன்பானந்தம், கருப்புசாமி, மருதவாணன், தனகொடி, கொளஞ்சி, சுதாகர், தலித்தாசன், உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கெடுத்தனர்.

Tags:    

Similar News