மின்கட்டண உயர்வை ரத்து செய்யகோரி இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

Electricity Tariff - இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-04 07:36 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக கட்சியினர்.

Electricity Tariff - அரியலூர் பேருந்து நிலையம் அருகில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மின்கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அருள்கணேசன், மாவட்ட பொருளாளர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மின்சார கட்டண உயர்வை குறைக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும். பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பார்க்கவ குல முன்னேற்ற சங்க மாறில துணைபொதுச்செயலாளர் கதிர்கணேசன் சிறப்புரையாற்றினார். மாவட்ட மகளிரணி தலைவர் பச்சையம்மாள், திருமானூர் ஒன்றிய செயலாளர் குமாரசாமி, செந்துறை ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, சன்னாவூர் பச்சமுத்து உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செய்தி தொடர்பாளர் சங்கர் நன்றி கூறினார். 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News