டிச. 21 -ஆம் தேதி அரியலூர் கோட்ட மின்நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம்

மின்நுகர்வோர்கள் விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளிக்கலாம்

Update: 2021-12-18 07:18 GMT

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் - அரியலூர் கோட்டம் சார்பாக வருகிற 21.12.2021 செவ்வாய் கிழமை காலை 11.00 மணியளவில்  மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்" மேற்பார்வை பொறியாளர் / பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம் / பெரம்பலூர் தலைமையில். அரியலூர் ராஜாஜி நகர் - காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

எனவே , அரியலூர் கோட்டத்தைச் சேர்ந்த  மின்நுகர்வோர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன் அடையலாம்.கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Similar News