ஞாயிற்றுக்கிழமை போட்டித் தேர்வுகளுக்கு செல்வோருக்கு அனுமதி

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டித்தேர்வுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-07 00:30 GMT
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில் அன்று நடைபெறும் போட்டித்தேர்வுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பில், கொரோனா பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஞாயிற்றுக்கிழமையில் மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.ஸி / டி.என்.பி.எஸ்.ஸி) நடத்தும் தேர்வுகள், மற்ற போட்டித் தேர்வுகள், நடைபெறும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்கச் செல்லும் இளைஞர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு அல்லது நிறுவனங்களின் அழைப்பு கடிதம் ஆகியற்றை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News