பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சிஐடியூ சங்கம் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் விலைஉயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்துள்ளால், அதன் விலைகளை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று சிஐடியூ சங்கம் ஆர்ப்பாட்டம்.

Update: 2021-06-18 06:34 GMT

அரியலூரில் அரசு போக்குவரத்து சிஐடியூ சங்க தொழிலாளர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய மார்க்கெட் தெருவில் சிஐடியூ மாவட்ட துணை தலைவர் சந்தானம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலைஉயர்வை திரும்ப பெறவேண்டும். பெட்ரோல், டீசல் விலைஉயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலைகளும் அதிகரித்துள்ளால், அதன் விலைகளையும் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று கோஷம் எழுப்பட்டது. சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், சிஐடியூ அரசு போக்குவரத்து தோழர்கள் முருகன், கஷ்பார், ஜெகநாதன், அழகு, சிபிஐ(எம்) சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News