அரியலூர் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் மேலும் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 341பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Update: 2021-05-05 03:00 GMT

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துமனைகளில் 341 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  குணமடைந்து வீடுதிரும்பியவர்கள் 47பேர்.

இதுவரை 5772 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 5378 குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் நேற்று மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 1060 பேர். இதுவரை 1,66,805 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 5772 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 1,61,033 பேர்.

மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 8201, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 4,15,020. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 22,712 பேர். பரிசோதனைகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 799 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 21791 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 122 பேர்.

நேற்று கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 373 பேர். இதில் முதல் தடுப்பூசியை 159 பேரும், இரண்டாவது தடுப்பூசியை 214 பேரும் போட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News