அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 54 பேர் பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 54பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2022-01-18 15:08 GMT

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 14 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 17,466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,780 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 265 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 1417 பேர். இதுவரை 3,57,647 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 17,466 பேர், நோய்த்தொற்று இல்லாதவர்கள் 3,40,181 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 13,930. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,80,655. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 49,570 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 1,996 பேர். நோய்த்தொற்று இல்லாதவர்கள் 47,439 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 135 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 1441 பேர். இதில்,  முதல் தடுப்பூசியை இன்று 146 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 1173 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். இன்று 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் 16 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Tags:    

Similar News