அரியலூர் மாவட்டத்தில் இன்று 105 பேருக்கு கொரோனா -11பேர் உயிரிழப்பு

கொரோனாவில் இருந்து இன்றுவரை 13,430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,978 பேர் குணமடைந்துள்ளனர்.

Update: 2021-06-11 16:03 GMT

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 11பேர் உயிரிழப்பு. இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 256 பேர். மருத்துமனைகளில் 1283 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 13,430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 11,978 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 169 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 1162 பேர். இதுவரை 2,09,379 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 13,430 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 1,95,949 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 9329, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 4,65,544 அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 27,584 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,377 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 26,096 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 111 பேர்.

நோய்பரவல் கட்டுப்பாட்டு மண்டலங்களாக ஊரகப்பகுதியில் 46 இடங்களும், நகரப்பகுதியில் 6 இடங்களும், பேரூராட்சியில் 1 இடங்களும் சேர்த்து 53 இடங்கள் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது.

முகக்கவசம் அணிவோம்! சமூக இடைவெளி கடைபிடிப்போம்!! கொரோனாவை தடுப்போம்!!!

Tags:    

Similar News