அரியலூர் மாவட்டத்தில் இன்று 98 பேருக்கு கொரோனா -ஒருவர் உயிரிழப்பு

ஊரகப்பகுதியில் 41, நகரப்பகுதியில் 6, பேரூராட்சியில் 1 இடங்களும் சேர்த்து 48 இடங்கள் நோய்பரவல் கட்டுப்பாட்டு மண்டலங்கள்.

Update: 2021-06-12 15:35 GMT

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழப்பு. இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 278 பேர். மருத்துமனைகளில் 1102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 13,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 12,256 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 1171 பேர். இதுவரை 2,10,570 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 13,528 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 1,97,042 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 9360, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 4,66,903 அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 27,689 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,386 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 26,198 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 105 பேர்.

நோய்பரவல் கட்டுப்பாட்டு மண்டலங்களாக ஊரகப்பகுதியில் 41 இடங்களும், நகரப்பகுதியில் 6 இடங்களும், பேரூராட்சியில் 1 இடங்களும் சேர்த்து 48 இடங்கள் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது.

முகக்கவசம் அணிவோம்! சமூக இடைவெளி கடைபிடிப்போம்!! கொரோனாவை தடுப்போம்!!!

Tags:    

Similar News