அரியலூர் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா- ஒருவர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவிற்கு ஒருவர் பலியானார். 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-10-21 15:38 GMT


அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடு திரும்பியர்வர்கள் 6 பேர். இன்று ஒருவர் உயிரிழந்து உள்ளார். மருத்துமனைகளில் 68 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,489 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 257 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 463 பேர். இதுவரை 3,19,160 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,814 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 3,02,346 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,804. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,23,099. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 41,733 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,862 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 39,776 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 95 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 3200 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 2712 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 488 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News