அரியலூர் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா தொற்று

நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,913 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 3,17,479 பேர்.

Update: 2021-11-21 18:15 GMT
21ம் தேதி கொரோனா நிலவரம்...

அரியலூர் மாவட்டத்தில் இன்று 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 3 பேர். மருத்துமனைகளில் 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,620 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 262 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 133 பேர். இதுவரை 3,34,392 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,913 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 3,17,479 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 13,222. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,41,525. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 44,266 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,879 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 42,365 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 22 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 38834 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 20173 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 18661 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News