அரியலூர் மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 3 பேர் உயிரிழப்பு

3,20,091 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,818 பேர், தொற்று இல்லாதவர்கள் 3,03,273 பேர்

Update: 2021-10-23 16:57 GMT

23ம் தேதி கொரோனா நிலவரம்

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 6 பேர். மருத்துமனைகளில் 58 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 3பேர் உயிரிழப்பு.

இன்றுவரை 16,818 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,500 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 260 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 221 பேர். இதுவரை 3,20,091 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,818 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 3,03,273 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,822. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,24,091. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 41,851 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 1,864 பேர். நோய் தொற்று இல்லாதவர்கள் 39,953 பேர். பரிசோதனை முடிவு வர வேண்டியவர்கள் 35 பேர்.

Tags:    

Similar News