அரியலூர் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-06 16:30 GMT

பைல் படம்

அரியலூர் மாவட்டத்தில் இன்று 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பியள்ளார். மருத்துமனைகளில் 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,650 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 264 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 598 பேர். இதுவரை 3,40,154 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,931 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 3,23,223 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 13,387. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,50,076. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 45,476 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,885 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 43,595 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 102 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 6034 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 596 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 5438 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News