அரியலூர் மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2405 பேர். இதில் முதல் தடுப்பூசியை 2007 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.

Update: 2021-07-19 15:25 GMT

மாதிரி படம் 

19ம் தேதி கொரோனா நிலவரம்:

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 34 பேர். மருத்துமனைகளில் 319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 15,538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 14,989 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 2,43,284 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 15,538 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,27,746 பேர். அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 10,371. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,12,782. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 31,853 பேர்.

முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,646 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 30,122 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 85 பேர். கொரோனா இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2405 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 2007 பேர் போட்டுக்கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 398 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.





Tags:    

Similar News