அரியலூர் மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு

அரியலூரில் இன்று குணமடைந்து வீடு திரும்பியர்வர்கள் 9 பேர். மருத்துமனைகளில் 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2021-09-23 14:18 GMT

பைல் படம்.

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 9 பேர். மருத்துமனைகளில் 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,251 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 254 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 675 பேர். இதுவரை 3,05,151 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,628 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,88,523 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,318. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,99,707. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 39,245 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,839 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 37,310 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 106 பேர்.

Tags:    

Similar News