அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 3 பேர் பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 3 பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளார்.

Update: 2021-12-12 17:09 GMT

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 3 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளார். மருத்துவமனைகளில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,934 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,658 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 264 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 126 பேர். இதுவரை 3,43,156 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,934 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 3,26,222 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 13,476. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,54,525. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 46,094 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,885 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 44,158 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 51 பேர்.

Tags:    

Similar News