அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழியினை அனைத்துத் துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
கலெக்டர் ரமண சரஸ்வதி அரசியலமைப்பு சட்ட உறுதி மொழி படிக்க அதனை அனைத்து துறை ஊழியர்களும் திரும்ப படித்து ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.