பெட்ரோல்,டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் காஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-04-03 15:00 GMT

அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.

அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் பேருந்து நிலையம் அருகே பெட்ரோல்,டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து, சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு செந்துறை முன்னாள் வட்டாரத் தலைவர் கொளஞ்சி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வட்டாரத் தலைவர்கள் (வ) மணிகண்டன், (தெ) ராஜேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News