அரியலூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

Update: 2022-04-04 10:03 GMT

அரியலூர் மாவட்டம் திருமானூரில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

.


அரியலூர் மாவட்டத்தில், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் அருணன், திருமானூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் புனிதன், தா.பழூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய ராதாகிருஷ்ணன், ஆண்டிமடம் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம், செந்துறை கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் அர்ஜூனன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டங்களில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு பேசினர்.

Tags:    

Similar News