அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற நிறைவு விழா

ஆங்கில இலக்கியம் பயில்வதன் மூலம் நிறைய வேலை வாய்ப்புகள் பெறலாம்

Update: 2022-04-30 11:46 GMT

பூம்புகார் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் எஸ்.சிவராஜா பங்கேற்று பேசினார்

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில், ஆங்கில இலக்கிய மன்ற நிறைவு விழா ஆங்கிலத்துறை சார்பில் நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஜெ.மலர்விழி தலைமை வகித்தார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் எஸ்.சிவராஜா பங்கேற்று, ஆங்கில இலக்கியம் மெய்த்தன்மைக்கு வழிவகுக்கிறது  என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அப்போது, ஆங்கில இலக்கியத்தின் மூலம் நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான நல்ல பல பயன்பெறமுடியும். ஆங்கில இலக்கியம் பயில்வதன் மூலம் நிறைய வேலை வாய்ப்புகள் பெறலாம். இவை அனைத்தும் அரசு கல்லூரியில் பயிலும் உங்களால் மட்டுமே முடியும் என்றார். விழாவில் ஆங்கிலத்துறை மாணவர்கள், அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆங்கிலத் துறைத் தலைவர் டோமினிக் அமல்ராஜ் வரவேற்றார். நிறைவாக ஆங்கிலத் துறை மூன்றாமாண்டு மாணவி ஹரிணி நன்றி கூறினார்

Tags:    

Similar News