ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

Update: 2021-12-25 07:30 GMT

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள குடில்.


அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. வீரமாமுனிவரால் கட்டப்பட்டதும், கிறிஸ்தவ ஆலயங்களில் பழமை வாய்ந்ததுமான இங்கு, கடந்த 23 ம் தேதி இரவு 11 மணியளவில், பங்கு தந்தை சுவக்கின் தலைமையில், உதவி பங்கு தந்தை இன்பென்ட்ராஜ் முன்னிலையில், கிறிஸ்து பிறப்பு திருப்பலியும், தொடர்ந்து ஏசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடர்ந்து, நேற்று இரவு,  கிறிஸ்துமஸ் விழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இன்று காலை அனைவரும் குழந்தை ஏசுவை முத்தமிட்டு வணங்கி ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். பின்னர் அனைவருக்கும், கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது. இதேபோல் திருமானூர், புதுக்கோட்டை, வரதராஜன்பேட்டை, குலமாணிக்கம், விளாகம், அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Tags:    

Similar News