இரண்டு வீடுகளில் நேரிட்ட தீவிபத்தில் பணம், நகை, ஆவணங்கள் தீக்கிரை
வாரணவாசியில் தீ விபத்தில் வீடுகளில் இருந்த 3 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் பணம், ஆவணங்கள், பொருட்கள் எரிந்து சேதமடைந்தது
அரியலூர் மாவட்டம், வாரணவாசி பகுதியில் இரண்டு வீடுகள் தீப்பற்றி எரிந்த விபத்தில் பணம் மற்றும் ஆவணங்கள் எரிந்து நாசம்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள வாரணவாசி பகுதி விவசாயி முருகேசன். இவர் காலையில் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். மதிய நேரத்தில் திடீரென முருகேசன் வீட்டு மேற்கூரை தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், கொழுந்து விட்டு எரிந்த தீ, அருகிலிருக்கும் தனலட்சுமி என்பவரின் வீட்டிற்கும் பரவியது.
இதனையடுத்து, சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் இரண்டு வீடுகளிலும் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால், இந்த தீ விபத்தில் அந்த வீடுகளில் இருந்த 3 பவுன் தங்க நகை, 75 ஆயிரம் ரூபாய் பணம், ஆவணங்கள், பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீ விபத்துக்காக காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.