இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-17 09:31 GMT

பைல் படம்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தேர்வு மையம் வாயிலாக இந்திய ஏர்மென் பணிக்கு விரைவில் தகுதி வாய்ந்த ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள ஆண்கள் மட்டும் தங்களது விவரங்களை google Form -இல் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfKvsNW8mWFlk0jcOIVm-G4Md1NNQDSlMBCMXXdOXhu-G0jag/viewform?vc=0&c=0&w=1&flr=0

விண்ணப்பிக்க தகுதிகள் - 17 முதல் 21 வயதிற்குட்பட்ட ஆண்கள் மட்டும், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

எனவே அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News