அரியலூர்: சாத்தமங்கலம் தனியார் சர்க்கரை ஆலையில் ரத்ததான முகாம்

சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலையில், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை சார்பில் ரத்ததானமுகாம் நடைபெற்றது

Update: 2022-02-24 08:16 GMT

சாத்தமங்கலம் தனியார் சர்க்கரை ஆலையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.


அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சாத்தமங்கலம் தனியார்  சர்க்கரை ஆலையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

திருமானூர் சுகாதார வட்டாரம், கீழப்பழுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சர்க்கரை ஆலை சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் பணியாளர்கள் 32 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். முகாமை சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதாராணி தொடங்கி வைத்தார்.

ஆலை பொது மேலாளர் பழனிவேல்ராஜன், மனிதவள மேலாளர் மர்லி ஜோன்ஸ், வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலை மக்கள் தொடர்பு அலுவலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் ரத்தம் சேகரித்தனர்.

Tags:    

Similar News