ஜெயங்கொண்டம்: பாப்பாக்குடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட பூமி பூஜை

ஜெயங்கொண்டம் அருகே பாப்பாக்குடி ஊராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ. 24.75 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை போடப்பட்டது.

Update: 2022-04-24 07:48 GMT

பாப்பாக்குடி ஊராட்சிக்கு, புதிய கட்டிடம் ரூ. 24.75  லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு பூமி பூஜை  போடப்பட்டது.


அரியலூர்  மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், பாப்பாக்குடி ஊராட்சிக்கு, புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் ரூபாய் 24.75 மதிப்பீட்டில் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் (வளர்ச்சி) , ஊராட்சி மன்ற தலைவர் ஆஷாவினோத், துணைத்தலைவர் குமார்,மு.ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன்,கிளை செயலாளர்கள் பட்டு.செல்வம், வேல்முருகன், கல்யாணம், அன்பழகன், பிரதிநிதி சம்பத் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,கழக முன்னோடிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News