அரியலூர்: அவ்வையார் விருதுக்கு விண்ணப்பம் செய்ய கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர் மாவட்டத்தில் அவ்வையார் விருது பெற விரும்புவோர் விண்ணப்பம் செய்யலாம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-12-16 08:12 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உலக மகளிர் தின விழா ஆண்டு தோறும் மார்ச் 8ல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 2012 முதல் மகளிர் தின விழா கொண்டாட்டத்தின் போது, பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம், சான்று மற்றம் சால்வை வழங்கப்படும்.

இவ்வாண்டிற்கான உலக மகளிர் தின விழா 08.03.2022ஆம் நாளன்று கொண்டாடப்படும்போது, அவ்வையார் விருது வழங்கப்படவுள்ளதால் தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம், போன்ற  துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுவராக இருக்கும் பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். 24.12.2021-க்குள் மாவட்ட ஆட்சியர் வளாகம்,அறை எண்:20, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News