கொள்ளிடம் கரையோர பகுதிகளில் நின்று "செல்பி" எடுப்பதை தவிர்க்கவும்

கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் கரையோர பகுதிகளில் நின்று"செல்பி" எடுப்பதை தவிர்க்க மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

Update: 2022-08-29 14:45 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில்,  காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், காவிரி ஆற்றில் சுமார் 120000 கன அடி அளவிற்கு திறந்துவிடப்பட்டு, தொடர்ந்து அதிகரிக்கும் நிலை உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் சுமார் 64000 காண அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

எனவே, அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீள்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம்.   கரையோர கிராமங்களில் உள்ள வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மேலும், பாதுகாப்பற்ற கரையோர பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்கள் "செல்பி" எடுப்பதை தவிர்க்வும்.  ஆறு மற்றும் கால்வாய்களில் அதிகளவு நீர் வந்துகொண்டிருக்கும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு தங்கள் குழந்தைகள் விளையாட செல்லவிடாமல் பெற்றோர்கள் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

விவசாயிகள் தங்களின் கால்நடைகளை ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டுகளில் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும், நீர்நிலைகளை கடந்து செல்லும் இதர பாதைகள் இருப்பின் அவற்றை அடையாளம் கண்டு எச்சரிக்கையுடன் பொதுமக்கள் செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்

Tags:    

Similar News