அரியலூர்: தனியார் கல்லூரியில் இணைய குற்றங்கள் குறித்த கருத்தரங்கம்
அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் இணைய குற்றங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் இணைய குற்றங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தனியார் நிறுவன அதிகாரி சிவகுமார் தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டார். மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் மீ.இரா.ரகுநாதன் சிறப்புரையாற்றினார்.
இயக்குனர் முனைவர் இரா.ராஜமாணிக்கம், தலைமைஆலோசகர் முனைவர். தங்க பிச்சையப்பா, ஆலோசகர்கள் ந.கணேசன் ந.ராமலிங்கம், நிர்வாக இயக்குனர் முனைவர் க.செந்தில்குமரன், கல்லூரி முதல்வர் முனைவர் ந.மதியழகன் ஆகியோர் விழாவினை சிறப்பித்தனர்.
விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.