தா.பழூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பரவலாக மழை
தா.பழூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
பரவலாக வெப்பச்சலனம் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஆங்காங்கே லேசானது முதல், பலத்த மழை பொழியும் என்று, வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மேகங்கள் சூழ்ந்து அவ்வப்போது லோசான மழை இருந்தது. இன்று காலை வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீர் என திரண்ட மேகங்களால், சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது.