அரியலூர் நகராட்சியில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
அரியலூர் நகரின் முக்கிய வீதிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
அரியலூர் நகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக டிரோன் மூலமாக கிருமி நாசினி தெளிக்கும்பணி இன்று தொடங்கியது. அரியலூர் நகரின் முக்கிய வீதிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் நகராட்சி பொருப்பு ஆணையர் மனோகரன் தலைமையில், நகராட்சி உதவி ஆய்வாளர் முத்துமுகமது உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுப்பட்டனர்..