நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த அரியலூர் எம்எல்ஏ

கரைவெட்டி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா திறந்து வைத்தார்.

Update: 2022-03-12 12:50 GMT

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா. 


அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கரைவெட்டி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கரைவெட்டி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உத்தரவிடப்பட்டது.

இன்று அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா கரைவெட்டி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இந்த நெல்கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் பயன்படுத்தி பலன் அடையுமாறு விவசாயிகளை எம்எல்ஏ சின்னப்பா கேட்டுக் கொண்டார். நிகழ்வில் அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News