அரியலூர்: கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை-மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

அரியலூர் மாவட்டம் முமுவதும் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்தார்.

Update: 2021-11-08 03:42 GMT

அரியலூர் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென மழை துவங்கியது. தொடர்ந்து பலமுறை மணிக்கணக்கில் கொட்டித் தீர்த்த கனமழையால், வெள்ளநீர் பெருக்கெடுத்து தெருக்களில் ஓடியது.

நேற்று பெய்த கனமழையில் அரியலூரில் 9.4மி.மீ, திருமானூரில் 4.4மி.மீ, செந்துறையில் 13.2மி.மீ, ஜெயங்கொண்டம் 18மி.மீ ஆண்டிமடம் 12மி.மீ, என மாவட்டம் முழுவதும் 57மி.மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

இதனையடுத்து பள்ளிமாணவர்களின் சிரமம் கருதி, இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி விடுமுறை அளித்துள்ளார்.

Tags:    

Similar News