முன்களப்பணியாளராக பணியாற்ற இலவசமாக ஒருமாதம் குறுகிய கால பயிற்சி : அரியலூர் கலெக்டர் தகவல்

முன்களப்பணியாளராக பணியாற்ற இலவசமாக ஒருமாதம் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது என்று அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-02 08:43 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா (பைல் படம்)

முன்களப்பணியாளராக பணியாற்ற இலவசமாக ஒருமாதம் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுவது குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது.

இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றம் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் பிரதான் மந்திரி கிசான் கௌசல் விகாஸ் யோஜனா (PMKVY 3.0) என்ற பயிற்சி திட்டத்தின்கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக சுகாதாரத்துறையில் கோவிட் -19 பெருந்தொற்றை ஒழிக்கும் விதமாக முன்களப்பணியாளராக பணியாற்ற இலவசமாக கீழ்காணும் பிரிவுகளில் ஒருமாதம் குறுகிய கால பயிற்சி வழங்கப்பட உள்ளது.

அவசர மருத்துவ டெக்னீசியன் பணி (Emergency Medical Technician – Basic), பொது மருத்துவ சேவை உதவியாளர் (General Duty assistant), தீவிர சிகிச்சை பிரிவு உதவியாளர் (GDA – Advanced (critical care), வீட்டு சுகாதார உதவியாளர் (Home Health Aide), மருத்துவ உபகரண தொழில் நுட்ப உதவியாளர் (Medical Equipment Technology Assistant), ரத்தநாள துளையிடும் பணியாளர் (Phlebotomist)

பயிற்சி முடித்தவுடன் மாவட்ட அரசு மருத்துவமனை / ஆரம்ப சுகாதார நிலையம் / தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் தொழில் முறை பயிற்சியுடன் பணியில் சேரலாம்.

மேற்காணும் பயிற்சிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை சேரலாம். இந்த பயிற்சிகளில் சேர விரும்புபவர்கள் தங்களது பெயர், கல்வித்தகுதி, பயிற்சியில் சேர விரும்பும் பிரிவு, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை dstoperambalur@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 9488451405 தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொண்டு தங்களது விபரங்களை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News