அரியலூர்: பள்ளியில் பதுங்கிய பாம்பு- தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி பள்ளியில் பதுங்கி இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.

Update: 2022-02-16 14:49 GMT

அரியலூர் மாவட்டம் கீழ காவட்டாங்குறிச்சி பள்ளி சத்துணவு கூடத்தில் பதுங்கி இருந்த பாம்பு பிடிபட்டது.

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாழடைந்த நிலையில் உள்ள சத்துணவு கூடத்தில் சணல் சாக்குகள் அடங்கிய மூட்டையில் நல்ல பாம்பு ஒன்று ஒளிந்திருந்தது. இதனை கண்ட பள்ளி ஆசிரியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து பள்ளிக்கு வந்த தீயனைப்புத்துறையினர் நல்லபாம்பை பிடித்து ஊருக்கு வெளியில் உள்ள வயல்வெளியில் விட்டுச் சென்றனர்.

இதனையடுத்து பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக பாழடைந்த நிலையில் உள்ள சத்துணவு கூடத்தை இடிக்க வேண்டும் எனவும் பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News