அரியலூர் : போலி கால்நடை மருத்துவர் கைது
அரியலூரில் போலி கால்நடை மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் நானாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவர் அப்பகுதியில் தான் ஒரு கால்நடை மருத்துவர் எனகூறி, அப்பகுதிகளில் கால்நடைகளுக்கு கடந்த பல ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை அளித்த கால்நடை திடீரென இறந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் கால்நடை மண்டல இணை இயக்குனருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் தூத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை செய்தனர். அப்போது எட்டாம் வகுப்புவரை படித்துவிட்டு கடந்த 5 ஆண்டுகளாக கால்நடை மருத்துவர் என கூறி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், துரைராஜை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.