அரியலூர் மாவட்ட செந்துறை வடக்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்

முதல்வர் பிறந்தநாளை செந்துறை வடக்கு ஒன்றியத்தில் உள்ள 100 கிளைகளிலும் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தீர்மானம்.

Update: 2022-02-28 11:00 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை வடக்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர் ஞானமூர்த்தி விளக்க உரையாற்றினார்.


அரியலூர் மாவட்டம் செந்துறை வடக்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் அசாவீரன்குடிக்காடு ஆர். எஸ். மாத்தூரில் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய கழக செயலாளர் ஞானமூர்த்தி அனைவரையும் வரவேற்று விளக்க உரையாற்றினார். செயற்க்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்படன.

தீர்மானம்:

1)தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 9மாத காலத்தில் கொரோனா, கடும்மழை போன்ற பல்வேறு நெருக்கடிகளையும், நிதி நெருக்கடிக்களையும் சமாளித்து இந்தியாவின் முதல்மாநிலமாகவும், முதல் முதலமைச்சராகவும் அனைவராலும் பாராட்டப்படும் தமிழக முதல்வர் தளபதியார் அவர்களையும், அவருக்கு துணையாக சிறப்பாக பணியாற்றி வரும் அமைச்சர் பெருமக்களையும் இந்த கூட்டம் பாராட்டி, வாழ்த்துகிறது.

2) கடந்த 9 மாதகால கழக ஆட்சியின் சிறப்புக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நடந்து முடிந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொய்ப்பிறச்சாரத்தை முறியடித்து திமுக கூட்டணிக்கு 95% வெற்றியை தந்த தமிழக மக்களுக்கு இந்த கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

3)கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான தளபதியார் அவர்களின் பிறந்தநாளான மார்ச்சு 1ம் தேதி செந்துறை வடக்கு ஒன்றியத்தில் உள்ள 100 கிளைகளிலும் கொடியேற்றி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என இந்த கூட்டம் தீர்மானிக்கிறது. மேலும் மார்ச்சு மாதம் முழுதும் தளபதியாரின் பிறந்தநாளை சேவைத்திட்ட நாளாக கொண்டாடுவது என இந்த கூட்டம் தீர்மானிக்கிறது.

கலந்து கண்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சபாபதி, வி.பி. நடேசன், மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் விசுவநாதன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பாண்டியன் மற்றும் ஒன்றிய கிளைக் கழக பொறுப்பாளர்களும் அணி அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News