அரியலூர் மாவட்ட புதிய கலெக்டர் ரமண சரஸ்வதிக்கு எம்எல்ஏக்கள் வாழ்த்து
அரியலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட ரணம சரஸ்வதிக்கு எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்ட கலெக்டராக ரமணசரஸ்வதி பொருப்பேற்றுள்ளார். இவரை மரியாதை நிமித்தமாக அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதனையடுத்து எம்எல்ஏக்களுக்கு நன்றிதெரிவித்த மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி, மாவட்டத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்தினார்.