அரியலூர் மாவட்டத்தில் இன்று 68 பேருக்கு கொரோனா - ஒருவர் உயிரிப்பு

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 68 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Update: 2021-06-28 16:10 GMT

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று குணமடைந்து வீடு திரும்பியர்வர்கள் 82 பேர். மருத்துமனைகளில் 592 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை 14,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 13,950 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 205 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 9792, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 4,86,434 அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 29,505 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,547 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 27,836 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 122 பேர்.

இன்று கொரோனா தொற்றுக்கான தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 3437 பேர். இதில், முதலாவது தடுப்பூசியை இன்று 3266 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 171 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News