18-ம்தேதி அரியலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்

18-ம்தேதி அரியலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற இருப்பதாக கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-13 12:57 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கி பயனடையலாம்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேகமாக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 18.05.2022 அன்று காலை 11.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட ஆட்சியரக பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைப்பெறவுள்ளது.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் முகம் மட்டும் தெரியும்படியான வண்ண புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக வழங்கி பயனடையலாம்,

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News