அரியலூர் மாவட்டத்தில் இன்று 10 பேர் கொரோனாவால் பாதிப்பு

இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,342. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,00,744.

Update: 2021-09-24 15:55 GMT

பைல் படம்.

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 12 பேர். மருத்துமனைகளில் 127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,263 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 254 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 653 பேர். இதுவரை 3,05,853 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,644 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,89,209 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,342. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,00,744. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 39,348 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,841 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 37,414 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 103 பேர்.

Tags:    

Similar News