அரியலூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

அரியலூர் மாவட்டத்தில் இன்று புதியதாக 8 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-09-26 15:39 GMT

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 14 பேர். மருத்துமனைகளில் 117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,290 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 254 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,370. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,02,187. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 39,508 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,843 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 37,613 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 62 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 50914 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 37512 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 13402பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News